MARC காட்சி

Back
பிரம்மச்சிரச்சேதமூர்த்தி
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a பிரம்மச்சிரச்சேதமூர்த்தி
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a மணல் கல்
500 : _ _ |a ஆணவங்கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்த பிரம்ம சிரக்கண்டீஸ்வரர்
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a முன்பொரு காலத்தில் நான்முகனாகிய பிரம்மனும் சிவனைப் போலவே ஐந்து தலைகளைக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு கர்வம் ஏற்பட்டது. இருவருக்கும் ஐந்து தலைகள் அமைந்ததால் குழப்பமும் ஏற்பட்டது. பிரம்மனின் ஆணவத்தைப் போக்க சிவபெருமான் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்து விட்டார். அத்தலை அவர் கையோடு ஒட்டிக்கொண்டது. சிவபெருமானின் எட்டு வீரச்செயல்களில் இதுவும் ஒன்றாகும். எட்டுக் கைகளுடன் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ள பிரம்மன் தலைக் கொய்தவர் ஜடாபந்தம் தலையில் விளங்க, காதுகளில் வளையங்கள் அணி செய்ய, கழுத்தில் முத்துச்சரம், கண்டிகை திகழ, எட்டுக்கைகளிலும் முன்வளைகள், தோள்வளைகள் அமைய உள்ளார். முப்புரிநூல் இடது தோளிலிருந்து வலது பின்னங்கை வழி செல்கிறது. வீரச்சங்கிலி ஒன்று இடது தோளிலிருந்து வலது முழங்காலுக்குக் கீழே செல்கிறது. வலது முன் கையில் ஓங்கிய வாளையும், மற்றொரு வலது கையில் சூலத்தையும் கொண்டுள்ளார். இடது கைகளில் முன்கை அச்சுறுத்தும் தர்ஜனி முத்திரை காட்டுகிறது. பின்னங்கைகளில் ஒன்றில் கொய்த பிரம்மனின் ஐந்தாவது தலையையும், மற்றொன்றில் வியப்பு முத்திரையையும் கொண்டுள்ளார். கீழே நான்முகனாகிய பிரம்மன் அமர்ந்துள்ளார். அவரின் பின் வலது கை அக்கமாலையை பிடித்துள்ளது. முன் வலது கை இறைஞ்சும் முத்திரையாக அமைந்துள்ளது. ஜடாமகுடம், நீள் காதுகளில் குண்டலம், சரப்பளி, மார்பில் முப்புரிநூல், கைகளில் வளைகள் ஆகியன அமையப் பெற்றுள்ளன. அருகில் கைகளை கட்டிய நிலையில் இளம் முனிவர் போன்ற ஒருவர் பணிவுடன் நிற்கிறார். இவர் சண்டேசராய் இருக்கலாம்.
653 : _ _ |a பிரம்மசிரக்கண்டீசுவரர், பிரம்மகண்டீசுவரர், அட்டவீரட்டானர், பிரம்மன் தலை கொய்த பிரான், இராஜசிம்மவர்மப் பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி, கைலாசநாதர் கோயில்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
914 : _ _ |a 12.84226806
915 : _ _ |a 79.6897132
995 : _ _ |a TVA_SCL_000078
barcode : TVA_SCL_000078
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000078_கைலாசநாதர்-கோயில்_பிரம்மச்சிரச்சேதமூர்த்தி-001.jpg